Sunday 30 September 2012

பேரீச்சம்பழம் சிறந்த மருந்தாகும்.


பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

கிராம்பு பயன்கள்


சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களில் ஒன்றான கிராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.. இதில் யூனினால், பைனின், வேனிலின், போன்ற ஆவியாகும் எண்ணெய்ப் பொருட்களும், பிசின் மற்றும் டேனின்கள் உள்ளன.

இது பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள அசிடைல் யூஜினால் தசைப்பிடிப்பு வலியினை போக்கும் திறன் படைத்தது. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
பல்வலி போக்கும்
உடல் மற்றும் உள்ளத்தினை ஊக்குவிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. நினைவாற்றலை மேம்படுத்தும், மகப்போறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும் சுருங்கி விரிவதற்கும் உதவுகிறது. பல்வலி, மற்றும் சொத்தைப்பற்களின் பூச்சிகளை அழிக்க பயன்படுகிறது. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.. கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
உடல்வலி நீங்கும்
ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. அஜீரணம், வாயுத்தொல்லை, வாந்தி, இருமல், அடிவயிற்று வலி, தொண்டைகம்மல், மூக்கு ஒழுகல், தலைவலி ஆகியவற்றில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.. கிராம்பு எண்ணெய் மேல் பூச்சாக அடி, இடுப்பு வலி, மூட்டுவலி, மற்றும் தொடை,நரம்பு வலி ஆகியவற்றிர்க்கு நல்ல பலன் தருகிறது. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
தொண்டை எரிச்சல் நீங்கும்
உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.  சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சேர்த்து சாப்பிட தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
ஆஸ்துமா கட்டுப்படும்
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது



ன்றாட உணவில் நாம்சேர்க்கும் பொருட்கள் அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. நோய் வரும்முன் காத்து நீண்ட ஆயுளுடன் வாழ இவையும் பக்கபலமாக உதவிவருகின்றன.

ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், கருவாப்பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள்.

நம் முன்னோர்கள் அறிந்ததை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இதழிலும் நம்ம மண்ணு நம்ம மருந்து என்ற தலைப்பில் ஒவ்வொன்றையும் பற்றி அறிந்து வருகிறோம்.

இந்த இதழில் இலவங்கம் என்று அழைக்கப்படும் கிராம்பு பற்றி தெரிந்துகொள்வோம்.

கிராம்பு இந்தோனேசியாவில் 80 சதவிகிதம் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது.

இந்திய சமையலில் கிராம்பு அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. பிரியாணி உணவில் அதிகம் சேர்க்கிறார்கள். சீன வகை உணவிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.

இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.

Tamil                  - Kirambu

English               - cloves tree

Sanskrit              - Lavanga

Telugu                - Lavangamu

Malayalam         - Krambu

Hindi                   - Laung

Botanical name - Syzygium aromaticum


பித்த மயக்கம் பேதியொடு வாந்தியும்போம்

சுத்த விரத் தக்கடுப்புத் தோன்றுமோ மெத்த

இலவங்கங் கொண்ட வருக் கேற் சுகமாகும்

மலமங்கே கட்டுமென வாழ்த்து.

சுக்கிலநட் டங்கர்ண சூர்வியங்க லாஞ்சனந்தாட்

சிக்கல்விடாச் சர்வா சியப்பிணியுமக்குக்குட்

டங்கப் பவோடு தரிபடருந் தோன்றிலில்

வங்கப்பூ வோடுரைத்து வா

அகத்தியர் குணபாடம்

பசியைத் தூண்ட

சிலருக்கு குறைந்த அளவே உணவை சாப்பிட்டாலும் செரிமானமாகாமல் இருப்பதுபோல் தோன்றும். இவர்களுக்கு பசியே இருக்காது. இவர்கள் தினமும் உணவில் கிராம்பு சேர்த்துவந்தால் செரிமான சக்தி அதிகரித்து நன்கு பசியெடுக்கும்.

பித்தம் குறைய

வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தால் தான் மனித உடலின் செயல்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன. இதில் எதன் நிலை மாறினாலும் உடலில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றில் அதிகம் நிலைமாறுவது பித்த நீர்தான். பித்த அதிகரிப்பு ஏற்பட்டு உடலில் பல நோய்கள் உண்டாகும். இந்நிலை மாற கிராம்பு சிறந்த மருந்தாகும். 

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.

பல்வலி நீங்க

பல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை உபயோகப்படுத்துவார்கள். இது தொடர்ந்தால் பல பக்க விளைவுகள் உண்டாகும். சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி. 

கிராம்பை நசுக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி உடனே குணமாகும். ஆனால் இது நிரந்தர தீர்வல்ல. உடனே மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவம் செய்துகொள்வது நல்லது.

வாந்தி நிற்க

பேருந்துகளில் பயணம் செய்பவர்களக்கு சில சமயங்களில் வாந்தி ஏற்படும். மலை ஏறுபவர்கள் சிலக்கு வாந்தி உண்டாகும். இவர்கள் கிராம்பை வாயில் போட்டு இலேசாக மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி நிற்கும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாக

வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

வறட்டு இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.v சீன மருத்துவத்தில் கிராம்பின் பங்கு அதிகம். சிறுநீரகம், மண்ணீரல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிரம்பையே அதிகம் பயன் படுத்துகின்றனர்.

தலைபாரம் நீங்க 

கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும்

தொண்டைப்புண் ஆற

கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைத்து சாறு இறக்கினால் தொண்டைப்புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும்.

கிராம்பு, நிலவேம்பு இவற்றை சம அளவாக எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் உடல் அசதி நீங்கும். சுரத்திற்குப் பின் உண்டாகும் களைப்பைப் போக்கும்.

கிராம்பு, சுக்கு வகைக்கு 5 கிராம் எடுத்து அதனுடன் ஓமம், இந்துப்பு வகைக்கு 6 கிராம் எடுத்து சூரணம் செய்து தேனுடன் கலந்து கொடுத்தால் உணவு நன்றாக செரிமானமாகும்.

தோலில் உண்டாகும் படைகளுக்கு

கிராம்பை நீர்விட்டு அரைத்து படைகள் உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் தோலில் உண்டான படைகள் மறைந்துபோகும்.

கிராம்புத் தைலம்

கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயே கிராம்பு தைலம் என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல மணமுள்ளதாக இருக்கும். நாவில் பட்டால் உடனே சிவக்கும். இந்த கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.



கடுகு, கிராம்பு, ஏலக்காய் தினமும் பயன்படுத்தினால் என்ன

உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.
ஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
கிராம்பு: நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி : மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.
புதினா: ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.
ஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ஏலக்காய் ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.
மல்லி: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.
மஞ்சள்: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.
சோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.
பெருங்காயம்: கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.
சீரகம்: சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.
வெந்தயம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.
கடுகு: இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
பூண்டு: வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.
ஓமம்: இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது.

அழகான மென்மையான உதட்டினைப் பெற சில டிப்ஸ்


முகத்திற்கு அழகு தருவதில் எமது ஒவ்வொரு அங்கங்களும் அழகைக் கொடுக்கின்றன. கண், காது, மூக்கு, வாய், உதடு, முடி, பற்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகைக் கொடுக்கின்றன. 
இவற்றில் முகத்திற்கு அழகைத் தருவதில் உதட்டிற்கும் பெரும்பங்கு உண்டு. அதற்காக அனைவருமே நமது உதடுகள் நன்கு மென்மையாக, அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
 
உதட்டிற்கு பொருத்தமில்லாத உதட்டுச் சாயம் மற்றும் தரமில்லாத உதட்டுச்சாயத்தை பயன்படுத்துவதன் மூலம் உதட்டை கருமையடைய வழிவகுக்கின்றது. 
 
ஆகவே உதட்டை மென்மையாக பராமரிக்க சில எளிய வழிமுறைகள். இவற்றை செய்து பார்ப்பதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.  
 
தினமும் காலையில் பற்களை துலக்கியப் பின், சிறிது பேக்கிங் பவுடரை, உதட்டின் மீது, மென்மையாக தேய்த்து வந்தால், உதடுகள் வறட்சியடையாமல், மென்மையாக இருக்கும். 
 
உதட்டில் சிறிது தேன் அல்லது ஆமணக்கெண்ணெயை தேய்த்து வந்தால், உதடுகள் எப்போதும் ஈரப்பசையுடன் காணப்படும். 
 
உதடுகள் பிங்க் நிறத்தில் வேண்டுமென்றால், ரோஜா இதழ்களை, பால் கிரீமுடன் கலந்து தடவினால், உதடுகளுக்கு எப்போதும் லிப்ஸ்டிக் போட்டது போல் காணப்படும். 
 
பாதாம் பருப்பை நன்கு அரைத்து அதனை உதட்டிற்கு தடவி வந்தாலும் உதடுகள் மென்மையடையும். 
 
முக்கியமாக தினமும் 8-10 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் தண்ணீர் குறைவாக இருப்பதால் தான் உதடுகள் வறட்சியை அடைகின்றன. 
 
மேலும் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் நன்கு உண்ண வேண்டும் இவற்றின் மூலம் அழகான உதட்டினைப் பெறலாம். 

பெண்களின் தலைமுடி செழித்து வளர முருங்கை இலை உண்ணுங்கள்


சிலருக்கு தலைமுடி வளராமல் சிறியதாகவே இருக்கும். சிலருக்கு நன்கு வளர்ந்த பின்னர் சிறிது சிறிதாக உதிர ஆரம்பித்து விடும்.
இன்னும் சிலருக்கு தலை முடி பாதியிலேயே உடைந்து வறட்ச்சியைக் கொடுக்கின்றது. இதனால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தலைமுடி வளருவதற்காக பல்வேறு எண்ணெய், தைலம் போன்றவற்றை பாவிப்பார்கள்.
ஆகவே, இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு, தலைமுடி நன்கு வளர தினமும் முருங்கை இலையை சூப் செய்து உண்டு வருதல் சிறந்தது.
இதனால், தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து 3 மாதங்கள் உண்ணவேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கான பலன் கிட்டும்.
அதாவது, முருங்கை இலை 2 கப், வெண்ணெய் 1 தேக்கரண்டி, கோர்ன் ஃப்ளோர் 1 தேக்கரண்டி, உப்புத்தூள், மிளகுத்தூள் சிறிதளவு.
முதலில் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த முருங்கை இலையை 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி வரும்வரையில் வேகவேண்டும்.
பின்னர் அதனை வடிகட்டி தேவையானால் வெண்ணெய் சேர்த்து சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம். வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும் பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.
இவ்வாறு முருங்கைக் கீரை சாற்றை தினமும் குடித்து வர உங்கள் தலைமுடி 2 வாரங்களில் அடர்த்தியாக வளரும்.

Wednesday 19 September 2012

வெஜ் ரோல்ஸ்

தேவையானப் பொருட்கள்
  • மேல்மாவிற்கு:
  • மைதா மாவு - 1 1/2 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • ஈஸ்ட் - அரை தேக்கரண்டி
  • இளம் சூடான தண்ணீர் - கால் கப்
  • சீனி - ஒரு தேக்கரண்டி
  • பூரணத்திற்கு:
  • உருளைக்கிழங்கு - 2
  • தக்காளி - ஒன்று
  • கேரட் - ஒன்று
  • கோஸ், லீக்ஸ் கலவை - ஒரு கப்
  • வெங்காயம் - பாதி
  • உள்ளி - 4 பற்கள்
  • கடுகு, பெரிய சீரகம், கறுவா(பட்டை), கிராம்பு, ஏலம் - சிறிது
  • மிளகாய் தூள் - ஒரு மேசைகரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்
  • கோஸ், லீக்ஸ் கலவை - ஒரு கப்
  • கறிவேப்பிலை - சிறிது
  • தண்ணீர் - 2 கப்
  • எண்ணெய் - அரை லிட்டர் பொரிப்பதற்கு
தக்காளி, உருளைக்கிழங்கினை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும். காரட்டை மெல்லிய சிறு துண்டுகளாக வெட்டவும் அல்லது துருவி வைக்கவும். கோஸ், லீக்ஸ் இரண்டையும் மெலிதாக அரிந்து வைக்கவும். வெங்காயம், உள்ளியை பொடியாக வெட்டி வைக்கவும். கறுவா(பட்டை), கிராம்பு, ஏலத்தை வெறும் சட்டியில் வறுத்துபொடித்து வைக்கவும்.


இளம் சூடான தண்ணீரில் சீனியை கரைத்து அதில் ஈஸ்ட்டை போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் மைதா மாவினை அரித்தெடுத்து(சலித்து) உப்புடன் கலந்து வைக்கவும். பின்னர் நொதித்த ஈஸ்ட் கலவையை மாவுடன் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும். தேவைப்படின் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் பிசைந்த மாவினை உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள்(மணிநேரங்கள்) வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, பெரிய சீரகம், வெட்டிய உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளி ஆகியவற்றைப் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர் அதனுள்வெட்டிய கோஸ், லீக்ஸ், கேரட்டை சேர்த்து கிளறி மூடி 5 நிமிடங்களுக்கு அவிய விடவும்.

பின்னர் வெட்டிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு கலந்து மூடி வேக விடவும். தண்ணீர் ஓரளவு வற்றியதும் பொடித்து வைத்த ஏல கலவையை சேர்த்து கிளறவும். தண்ணீர் நன்கு வற்றி கறி சுருண்டு வந்ததும் இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.

பின்னர் குழைத்து வைத்த மாவினை எடுத்து திரும்பவும் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போல தேய்த்து கொள்ளவும்.

தேய்த்த மாவின் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது ஒன்றரை மேசைக்கரண்டி கறியை நீளவாக்கில் வைக்கவும். பின்னர் இரு பக்க கரையிலும் உள்ள மாவினை கறியின் மேலே வருமாறு மூடவும். (இப்போது செவ்வக வடிவில் இருக்கும்)
பின்னர் மாவினை கறியுடன் சேர்த்து இழுத்து உருட்டவும். (இது உருளை வடிவில் இருக்கும்).

ஒரு பிரஷ்ஷால் சிறிது தண்ணீரை இதன் மேலே பூசி ரஸ்க் தூளில்(Bread crumps) போட்டு பிரட்டவும்.

பிரட் தூள் உருளை முழுவதும் ஒட்டும்படி நன்கு பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.

இதேபோல் அனைத்து மாவையும் சப்பாத்திகளாக தேய்த்து, உள்ளே மசாலா வைத்து, உருட்டி, ப்ரட் துகள்களில் தேய்த்து எடுத்து வைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 லீட்டர் எண்ணெயை விட்டு, அது நன்கு கொதித்ததும் அதனுள் இந்த ரோல்சினை ஒன்று அல்லது இரண்டாக போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான வெஜ்-ரோல்ஸ் தயார். இதனை தக்காளி சாஸ்/கெட்ச்-அப்புடன் பரிமாறலாம்.
குறிப்பு;
மாவினை பிசைந்து உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள் வைத்திருந்து எடுக்கும் போது அது நன்கு ஊதியிருக்கும் (ஈஸ்ட் சேர்த்திருப்பதால்) எனவே அதனை திரும்பவும் பிசைதல் அவசியம். கறியை தண்ணீர் வற்றும் வரை விடும் போது அடிப்பிடிக்காது கிளறிக் கொண்டே இருக்கவும்.

கேரட் குக்கீஸ்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு 1 கப்
காரட் 5
பேக்கிங் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 2 கப்
வெண்ணெய் 2 கப்

மைதா 2 கப்
முட்டை 1
வெனிலா 1 டேபிள் ஸ்பூன்

உலர்ந்த திராட்சை, முந்திரி 8

உப்பு, நெய் தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை நன்றாக அவித்து, மசித்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கேரட் மசியலை சேர்க்கவும்.

மைதா, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றை நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை கேரட் கலவையுடன் கலந்து நன்றாக கடைய வேண்டும். தேவையானால் சிறிது எஸ்சென்ஸ் சேர்த்து கொள்ளலாம்.

பின்னர் இந்த கலவையை சிறிய டப்பாக்களிலோ அல்லது பெரிய தட்டிலோ நெய் தடவி, சிறிது இடைவெளி விட்டு ஊற்ற வேண்டும். அதன் மேற்பரப்பில் முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் போன்றவற்றை தூவலாம்.

இதனை 10 முதல் 15 நிமிடம் வரை ஓவனில் வைத்து பேக் பண்ணவும். பின் வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆறிய பின் பரிமாறலாம்.

ஆலு பரோட்டா


தேவையான பொருட்கள்

  • மாவை குழைக்க:
  • மைதா - ஒரு கப்
  • பட்டர் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - கால் தேக்கரண்டி
  • பால் - இரண்டு மேசக்கரண்டி
  • பில்லிங் செய்ய
  • பொடேடோ - ஒன்று (வேகவைத்து மசித்தது)
  • கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
  • சீரக தூள் - கால் தேக்கரண்டி
  • மிளகு தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - ஒரு பின்ச்
  • கொத்து மல்லி தழை - 2 மேசை கரண்டி ( பொடியாக நருக்கியது)
  • எண்ணை+ பட்டர் (அ) நெய் கலவை - பொரிக்க தேவையன அளவு

செய்முறை

  • மாவை குழைத்து கொள்ளுங்கள்.
  • பொடேடோவில் கலக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் நல்ல் மசித்து கொல்ளுங்கள்.
  • சிறிய உருண்டையை வைத்து வட்ட வடிவில் (அ) சதுர வடிவில் மாவைதேய்த்து அதி இந்த பில்லிங்கை பரவலாக வைத்து சதுர வைவாக மூடி இருபக்கமும் மாவை தடவி முஈண்டும் மெதுவாக தேய்க்கவும்.
  • தேய்த்து தவ்வாவில் எண்ணை பட்டர் (அ) நெய் கலவையை கொஞ்சமா ஊற்றி ஒரு ஒரு பரோட்டாவாக பொரித்தெடுக்கவும்.

வெள்ளை பணியாரம்


தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 500 கிராம்,
  • குண்டு உளுத்தம் பருப்பு - 125 கிராம் (4க்கு 1),
  • பால் - 1 கரண்டி,
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி,
  • உப்பு - 2 தேக்கரண்டி,
  • ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி.

செய்முறை

  • அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக 2 மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும்.
  • அரைத்த மாவுடன், பால், சர்க்கரை, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து கலக்கி 1/2 மணி நேரம் வைக்கவும். (மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்).
  • வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஒரு சின்ன கரண்டியால் மொண்டு ஊற்றவும்.
  • அரி கரண்டியால் எண்ணெயை பணியாரத்தின் மேலே அள்ளி ஊற்ற, உப்பி வரும்.
  • வெள்ளையாக இருக்கும் போதே, திருப்பி விட வேண்டும்.
  • மறுபுறமும் சிவக்காமல் வெள்ளையாக இருக்கும் போதே எண்ணெயை வடித்து எடுக்கவும்.
  • அப்படியே எல்லா மாவையும் ஊற்றி எடுக்கவும்.

குறிப்பு:

1) முக்கியமான விஷயம், மாவு தோசைப்பதத்திற்கு மேல் கெட்டியாகவோ, தண்ணீராகவோ இருக்க கூடாது. 2) சிவக்க விட கூடாது. 3) 3 அங்குல விட்டத்தில் இருந்தால் போதுமானது. 4) மாவை ஒரே முறையாக ஊற்ற வேண்டும், நிறுத்தி நிறுத்தி ஊற்றக்கூடாது. 5) ஒரு முறைக்கு ஒன்று தான் ஊற்ற வேண்டும். 6) சுட சுட சூடாக வெங்காய சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பருப்பு உருண்டை

தேவையான பொருட்கள்: 

வறுத்த கடலைப் பருப்பு - 1 கப்.

பயத்தம் பருப்பு - 1 கப்.

அரிசி - 1 கப்.

சர்க்கரை - 2 கப்.

தேங்காய் துறுவல் - கால் கப்.

நெய், ஏலம் - தேவைக்கேற்றப்படி.

செய்முறை:

பொடித்த பருப்பு, அரிசி ஆகியவற்றில் சர்க்கரையை பாகாக செய்து ஊற்றவும்.பின்னர் தேவையான அளவுக்கு தேங்காய் துறுவல், ஏலம் ஆகியவற்றை கலக்கவும்.

பின்னர் நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கவும். சூப்பரான இனிப்பு பருப்புஉருண்டை தயார்!

சில்லி சிக்கன் பிரை

கோழி 1 கி
பெரிய வெங்காயம் 6
மிளகாய் வற்றல் 7
தக்காளி 5
இஞ்சி, பூண்டு சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
கரம் மசாலா
டால்டா அல்லது நெய்
வினிகர்
எலுமிச்சை சாறு
வெள்ளரிக்காய்

செய்முறை: 

முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சிறிது நெய் விட்டு நன்றாக வதக்க வேண்டும். வேகவைத்த கலவையை தனியாக நெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் கறியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகளை வைத்து, எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

Wednesday 5 September 2012

சிக்கன் சாப்ஸ்


தேவைப்படும் பொருட்கள் :
1. காளான் - 4
2. பீன்ஸ் - 150 கிராம்
3. குடை மிளகாய் - 1
4. வெங்காயம் - 1
5. கோழிக் கறி - 350 கிராம்
6. இறைச்சி வேக வைத்த நீர் - 1/4 லிட்டர்
7. ஸோயா சாஸ் - 1 தேக்கரண்டி
8. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - ருசிக்கு ஏற்ப
10. மிளகு - 1 தேக்கரண்டி
11. ஷெர்ரி - 1 மேஜைக்கரண்டி
12. சோள மாவு - 1 தேக்கரண்டி
தயாரிப்பு முறை :
1. காளானை ஒரு பாத்திரத்தில் போடவும்
2. அதில் வெதுவெதுப்பான் நீரை ஊற்றவும்
3. இருபது நிமிடம் வரை ஊறவிடவும்.
4. ஊறிய பிறகு அதை எடுத்துத் தண்டுப்பகுதிகளை நீக்கி விடவும்
5. காளானை மாத்திரம் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
6. பீன்ஸைக் கழுவவும்
7. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
8. நார்களை அகற்றிக் கொள்ளவும்
9. குடை மிளகாய்களைக் கழுவிக் கொள்ளவும்
10. பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்
11. வெங்காயத்தைக் கழுவவும்
12. தோல் உரிக்கவும்
13. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
14.கறியைக் கழுவவும், துண்டுகளாக்கவும், பாத்திரத்திலிட்டு, அடுப்பிலேற்றி, அதை நன்றாக வேகவிடவும்.
தயாரிப்பு முறை :
1. இப்போது நறுக்கப்பட்ட காய்கறிகளுடன், வேக வைக்கப்பட்டுள்ள இறைச்சித் துண்டுகளைச் சேர்க்கவும்.
2. ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் இரண்டு மேஜைக் கரண்டி அளவு ஊற்றவும்.
3. எண்ணெயைக் காய விடவும்
4. காய்ந்தவுடன் காய்கறி, இறைச்சி கலந்த கலவையை அதில் போட்டுக் கிட்டத்தட்ட நான்கைந்து நிமிடங்கள் வதக்கவும்.
5. வதங்கிய பிறகு அதில் இறைச்சி வேக வைக்கப்பட்ட நீரை ஊற்றவும்.
6. அத்துடன் ஸோயா ஸாஸையும் ஊற்றவும்.
7. சர்க்கரையைக் கலக்கவும்
8. உப்பு ருசிக்குத் தேவையான அளவு போடவும்
9. மிளகைத் தூள் செய்து அதில் தூவவும்.
10. நன்றாகக் கொதிக்க விடவும்.
11. இதன் பின் அனலைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
12. ஒரு சிறிய பாத்திரத்தில் ஷெர்ரியை எடுத்துக் கொள்ளவும்
13. அதில் சோளமாவைக் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளவும்.
14. இக் கலவையையும் அடுப்பில் உள்ள கலவையுடன் சேர்க்கவும்.
15. பின்னர், மேலும் ஐந்து நிமிடங்கள் இதை அடுப்பிலேயே வைத்திருக்கவும்.
16. சிக்கன் சாப்ஸ் ரெடி.


SAMAYAL: ஆட்டு மூளை பொரியல்


தேவையான பொருள்கள்:
ஆட்டு மூளை - 2
மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணைய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.
* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.
* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.
* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.
* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.


ஆட்டு மூளை பொரியல்


தேவையான பொருள்கள்:
ஆட்டு மூளை - 2
மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணைய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.
* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.
* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.
* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.
* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.


J.ELANGOVAN.TRICHY