Saturday 19 December 2015

நித்திய கல்யாணி மருத்துவ குணம்

நித்திய கல்யாணி மருத்துவ குணம்


நித்திய கல்யாணி பூ

வீட்டில் பொதுவாக வளர்க்கமாட்டார்கள், இதை சுடுகாட்டுப் பூ என சொல்வார்கள்! சுவாமி பூசையில் இந்த பூவை பயன்படுத்த மாட்டார்கள்/ இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும்.  
இதன் ஐந்தாறு பூவை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதிமூத்திரம், உடல் பலவீனம், மிகு பசி, பசியின்மை தீரும். 

வேர்ச்சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் 2, 3 முறை கொடுக்கச் சிறுநீர்ச் சர்க்கரை குறையும். நோய் கட்டுப்படும். நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதிமூத்திரம் போன்றவை குணமாகும். இயற்கையில் காணப்படும் வகையான இச்செடி இன்றைய சூழலில் குறைந்து வருகின்றது
J.ELANGOVAN.TRICHY