Monday 21 July 2014

கருப்பட்டி பணியாரம்:

கருப்பட்டி பணியாரம்:

தேவையானப் பொருள்கள்:
இட்லி மாவு_ஒரு கிண்ணம்
கருப்பட்டி என்கிற பனைவெல்லம்_1/2 கிண்ணம்
ரவை_ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1 (விருப்பமானால்)
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
செய்முறை:
இட்லி மாவில் உப்பு குறைவாக இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும்.
வெல்லத்தைத் தூளாக்கி ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் கருக வாய்ப்புண்டு.
தண்ணீர் கொதித்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வெல்ல நீரை ஆற வைக்கவும்.
வெறும் வாணலியில் ரவையை சூடு வர வறுத்து ஆறியதும் மாவில் கொட்டிக் கலந்து வைக்கவும்.
மேலும் வெல்ல நீர்,ஏலக்காய்,தேங்காய்ப்பூ எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.
ஒரு 1/2 மணி நேரம் கழித்து (மாவில் உள்ள ரவை ஊறிய பிறகு) குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
சட்டி சூடாகியதும் ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு குழியின் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றி,மூடி வேக வைக்கவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் மேல் பாகம் தீய்ந்தும் உள்ளே வேகாமலும் இருக்கும்.
ஓரளவு வெந்திருக்கும் என நமக்கே தெரியும்.(எவ்வளவு இட்லி & தோசை சுட்டிருப்போம்!)அப்போது மூடியைத் திறந்து ஒரு ஷார்ப்பான அதே சமயம் தட்டையான ஒரு ஸ்பூனால் பணியாரத்தின் ஓரங்களை பெயர்த்து, திருப்பிப் போட்டு இந்த முறை சீக்கிரமே எடுத்துவிடவும்.
இப்போது சுவையான,இனிப்பான‌ பணியாரம் தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.அப்படியேதான் சாப்பிட வேண்டும்.
Photo: கருப்பட்டி பணியாரம்:

தேவையானப் பொருள்கள்:

இட்லி மாவு_ஒரு கிண்ணம்
கருப்பட்டி என்கிற பனைவெல்லம்_1/2 கிண்ணம்
ரவை_ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1 (விருப்பமானால்)
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)

செய்முறை:

இட்லி மாவில் உப்பு குறைவாக இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும்.

வெல்லத்தைத் தூளாக்கி ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் கருக வாய்ப்புண்டு.

தண்ணீர் கொதித்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வெல்ல நீரை ஆற வைக்கவும்.

வெறும் வாணலியில் ரவையை சூடு வர வறுத்து ஆறியதும் மாவில் கொட்டிக் கலந்து வைக்கவும்.

மேலும் வெல்ல நீர்,ஏலக்காய்,தேங்காய்ப்பூ எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.

ஒரு 1/2 மணி நேரம் கழித்து (மாவில் உள்ள ரவை ஊறிய பிறகு) குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.

சட்டி சூடாகியதும் ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு குழியின் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றி,மூடி வேக வைக்கவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் மேல் பாகம் தீய்ந்தும் உள்ளே வேகாமலும் இருக்கும்.

ஓரளவு வெந்திருக்கும் என நமக்கே தெரியும்.(எவ்வளவு இட்லி & தோசை சுட்டிருப்போம்!)அப்போது மூடியைத் திறந்து ஒரு ஷார்ப்பான அதே சமயம் தட்டையான ஒரு ஸ்பூனால் பணியாரத்தின் ஓரங்களை பெயர்த்து, திருப்பிப் போட்டு இந்த முறை சீக்கிரமே எடுத்துவிடவும்.

இப்போது சுவையான,இனிப்பான‌ பணியாரம் தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.அப்படியேதான் சாப்பிட வேண்டும்.
J.ELANGOVAN.TRICHY