Saturday 13 December 2014

ரத்த குழாய் அடைப்பு நீங்குவதற்கு

                          ரத்த குழாய் அடைப்பு நீங்குவதற்கு 

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம். 

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். 


மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:



1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் 


நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால் மருத்துவமனை வாங்கும்  பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.





Monday 8 December 2014

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு - ரூ10 செலவில்

CLICK ME
Ravoof Rahman
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.
அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.
வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…
நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

Thursday 4 December 2014

பெண்களே மச்சங்களின் பலன் தெரியுமா

பெண்களே  மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?
நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்
நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை – பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்
வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Friday 21 November 2014

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?



ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?
********************************************************************************
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய வழி இதோ...
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி (தனியா) - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும்.
பின்பு வடிகட்டி கட்டவும். தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.
சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார
இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Friday 31 October 2014

ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்


நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை 
அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த 
குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் 
அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் 
செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் 
சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை 
சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் 
மூன்று 
அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் 
குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத 
டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் 
செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய 
பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு 
ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு 
உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான 
இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் 
மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம 
அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை 
அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் 
கொள்ளுங்கள்.

ஆட்டுக்கால் பாயா !!!



ஆட்டுக்கால் பாயா !!!
தேவையான பொருள்கள்:
வேகவைக்க :
ஆட்டுக்கால் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 3

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

மஞ்சள்தூள் – தே. அளவு

இஞ்சி பூண்டு விழுது – தே. அளவு

மிளகு தூள் – தே. அளவு

மிளகாய்த்தூள் – தே. அளவு

மல்லித்தூள் – தே. அளவு

தேங்காய்ப் பால் – தே. அளவு

பாதாம் – தே. அளவு

மிளகுத்தூள் – தே. அளவு

உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் – ஒரு மேஜைக்கரண்டி

பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டு

கொத்துமல்லித்தழை – சிறிது

புதினா – சிறிது
எப்படி செய்வது?
ஆட்டுக்காலை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும். பாதாமை

வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து தேங்காய்ப் பாலுடன்

சேர்க்கவும். சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் வேகவைக்க தேவையான

பொருள்களைச் சேர்க்கவும். ஆட்டுக்காலை அனைத்து

மசாலாக்களுடனும் சேருமாறு நன்கு பிசறி பத்து நிமிடம் ஊற

வைக்கவும். குக்கரில் நான்கு குவளை (டம்ளர்) தண்ணீர் அல்லது

ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் குக்கர் மூடியைப் போட்டு வெயிட் போட்டு தீயை

நடுத்தரமாக எரியவிடவும்.
இல்லையென்றால் குழம்பு தெறிக்கும். நான்கு அல்லது ஐந்து விசில்

வரை வேகவிடவும். பிறகு தீயை குறைத்து (சிம்மில்) வேகவிடவும்.

ஆட்டுக்கால் இளசானதாக இருந்தால் 20 நிமிடத்திலும்

இல்லையென்றால் 30 நிமிடத்திலும் வெந்துவிடும். வெந்தபிறகு

அரைத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் பாதாம் கலவையை ஊற்றி

மீண்டும் கொதிக்க விடவும். பிறகு ஒரு கரண்டி மிளகு தூள் சேர்க்கவும்.

தனியே தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்துக்

கொண்டிருக்கும் ஆட்டுக்கால் குழம்பில் சேர்த்து இறக்கவும்.

Attukkalai drain the wash water . Remove the skin and grind the almonds soaked in

hot water and add to the coconut milk .
நம்முடைய நம் வீட்டு சமையல் பக்கத்தை உங்களுடைய

நண்பர்களுக்கும் தெரிய படுத்தவும் தோழமைகளே 

Wednesday 24 September 2014

கிராம்பு மகிமை

இலவங்கம் கிராம்பு என்றும் அழைக்கப்படுகிறது. கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது. 

உள் உறுப்புக்களைத் தூண்டக் கூடியது, வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது, வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கூடியது, 

வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது, தொற்று நோய்க் கிருமிகளைத் தோற்கடிக்க வல்லது, சோர்வை போக்கி புத்துணர்வை தூண்டக் கூடியது இலவங்க தைலம் வலிகுறைப்பானாக மேற்பூச்சாக பயன் படுத்தக்கூடியது. 

வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்சதைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம் பயன்படுகிறது. பல்வலி ஏற்பட்ட போது இலங்கதைலத்தைப் பஞ்சில் நனைத்து மேலே சிறிது நேரம் வைத்திருப்பதால் ஒரு வலி மறுப்பானாக பயன்படுகிறது. "யூஜினால்'' என்னும் இலவங்க தைலத்தில் உள்ள முக்கிய வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. 

இலவங்கத்தின் மொத்தப் பகுதியிலும் ஒரு நல்ல மருத்துவ குணம் ஒளிந்துள்ளது. அதாவது இன்றைய நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பல ரசாயனக் கலவையால் ஆன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. 

இவை ஈரலுக்கு எதிராகச் செயல்பட்டு அதைக் கெடுக்கக் கூடியதாகவும் எலும்பு மஜ்ஜையைப் பாதித்து ரத்த உற்பத்தியைத் தடுப்பதோடு ரத்தத்தில் உள்ள "ஹீமோகுளோபின்'' என்னும் இரும்புச் சத்துக்குறைப்பாட்டை ஏற்படுத்தி ரத்த சோகையை உண்டாக்கக் கூடியவையாக உள்ளன. 

இத்தகைய பக்க விளைவுகள் ஏற்படா வண்ணம் இலவங்கம் புற்று நோய்க்கென "கீமோ தெரபி'' சிகிச்சை மேற்கொள்பவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. 

இலவங்கத்தில் பொதிந்துள்ள சத்துக்கள் :

பொதுவாக 100 கிராம் இலவங்கத்தில் பின்வரும் ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன. உயிர்ச்சத்து 47ரி கலோரி, கார்போ ஹைட்ரேட் 10.51கிராம், புரதச் சத்து 3.27 கிராம், கொழுப்புச் சத்து 0.15 கிராம், நார்ச்சத்து 5.4 கிராம், விட்டமின் சத்துக்களான ஃபோலேட்ஸ் 68 மைக்ரோ.கி. நியாசின் 1.05 மி.கி., பேண்டோதெனிக் அமிலம் 0.33 மி.கி., விட்டமின் `சி' 11.7 மி.கி., விட்டமின் `ஈ' 0.19 மி.கி., விட்டமின் ரி. 14.8 மை.கி. மற்றுமி சிறிதளவு ரிபோஃப்ளேவின் மற்றும் தயாமின் ஆகியனவும் அடங்கியுள்ளன. 

மேலும், நீர்ச்சத்துக்களான சோடியம் என்னும் உப்புச் சத்து 94 மி.கி. அளவும் பொட்டாசியம் உப்பு 370 மி.கிராம் அளவும் உள்ளன. தாது உப்புக்களான கால்சியம் 44 மி.கி., காப்பர் 0.23 மி.கி., இரும்பு 1.28 மி.கி., மெக்னீஷியம் 60 மி.கி., மாங்கனீஸ் 0.256 மி.கி., பாஸ்பரஸ் 90 மி.கி., செலினியம் 7.2 மை.கி., துத்தநாகம் 2.32 மி.கி. ஆகியவற்றோடு கரோட்டீன், லூடின்சியா சாந்தின் ஆகிய சத்துக்களும் பொதித்துள்ளன. 

இலவங்கத்தின் அடங்கியுள்ள "யூஜினால்'' என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்க உதவும். வழிவழியாக வரும் பரம்பரை மருத்துவத்தில் இலவங்கத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதைப் பருகச் செய்வதால் செரிமானமின்மை, வயிற்று உப்புசம் ஆகியவை குறைவதாக உள்ளது. இலவங்கம் இயற்கையில் நமக்குக் கிடைத்த வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் விளங்குகிறது. 

இலவங்கத் தைலத்தை வலியுள்ள இடத்தில் மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது பூசிய இடத்தில் சற்று எரிச்சலை உண்டாக்கி ரத்த நாளங்களை விரிவடையச் செய்து அதன்மூலம் ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி தோல் பகுதியை சற்று வெம்மைப் படுத்துகிறது. 

இதனால் மூட்டுவலி, தசைப்பிடிப்பு கண்டபோது பெரும் நிவாரணம் கிடைக்கிறது. இலவங்கத்தை உணவாகப் பயன்படுத்தும் போது தோல் புற்று நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் நுரைஈரல் புற்று நோயை தடுத்து நிறுத்தவல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. 

இலவங்கம் ரத்தத்தில் ஏற்படும் வட்டணுக் குறைவை தடுக்கும் வகையில் செயல்படுகிறது. இதனால் இதயமும் இதய நாளங்களும் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது. இலவங்க எண்ணெய் ஒரு கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது. 

தொடர்ந்து அதன் மணம் 4 முதல் 5 மணிநேரம் வரை கொசுக்களை விரட்டும் வல்லமை வாய்ந்தது. இலவங்கம் மூளையைப் பாதிக்கக் கூடியவையான பரபரப்பு, ஞாபக மறதி, மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கக் கூடியது. மூளைக்கு சுறுசுறுப்பைத் தரவல்லது. 

இலவங்கத் தைலத்தோடு சிறிது உப்புசேர்த்து தலைவலி கண்டபோது நெற்றிப் பொட்டின் மீது பற்றிடுவதால் ஒருவித குளிர்ச்சியை உண்டாக்கி தலைவலியை உடனடியாக விரட்டுகிறது.

Saturday 13 September 2014

புற்று நோயை முற்றிலும் அழிக்க


வெறும் நூறு ரூபாயில் (Rs.100)
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த
நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் ,
சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை ,
வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த
புற்று நோய்க்கு உண்டு.
இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில
மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த
நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள்
மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில்
மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும்
செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின்
வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில்
பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய
Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக
கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம் சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும்
பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள
முட்களை நீக்கி கொள்ள
வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது.
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக்
கொள்ளவேண்டும் அடுத்த படியாக
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக
கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன்
சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்.
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்.
இம்மருந்தை தினமும்மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்
உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்
போதும் மருந்தை நன்றாக குலுக்கிக்
கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால்
பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும்
தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய
கூடாது.
இடையிடையே மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு நோய்
நன்கு குணமாகும்
வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .
சிலருக்கு மிக
குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்
கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான
சக்தி மிகுந்த மருந்து ஆகும் .
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக
வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத
பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில்
இதை தெரியப்படுத்துங்கள்.
யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக
இருக்க கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக ,
புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள
ஆரம்பித்தல் நல்லது.
ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய்
வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க..
கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான
அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப்
போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை ,
இதுக்கு மேலே தொடுவீங்க !?
-R P KARTHIK

Friday 12 September 2014

எல்லா புகழும் என் தந்தைக்கே சேரும் .

நெஞ்சார்ந்த நன்றி
அன்புள்ள நண்பர்களே ,
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற 
அருள்மிகு ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக
திருவிழாவை முன்னிட்டு எத்தனையோ மக்கள் நன்கொடை அளித்து இருந்தபோதும் என்மகள் ரக்ஷீத பிரியா தன்னுடைய சிறு பங்காக சிறு தொகையினை நன்கொடை அளித்தமைக்கு கிராம பொதுகுழு தெய்வீக மகாசபை சார்பில் கோயில் மதில் சுவரில் அமைக்கப்பெற்ற கல்வெட்டில் என்மகளின் பெயரை பதிய வைத்து இந்த உலகில் நீங்கா புகழுடன் நீடுடி பெயருடன் வாழ வைத்த அனைத்து பொதுகுழு உறுப்பினர்களுக்கும்   எங்கள் குடும்பத்தாரின் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் அன்புடன் தெரிவிக்கிறோம் .
நன்றி நன்றி .

இப்படிக்கு .
ஜெ.இளங்கோவன் குடும்பத்தார் 
மு.ஜம்புலிங்கம் (லேட்) எல்லா புகழும் என் தந்தைக்கே சேரும் .




























Thursday 11 September 2014

இளமையா இருக்க ஆசையா?


Baskar Jayaraman added 2 new photos.
குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’

இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த 

மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை 


மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த 

செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் 

செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் 

இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி 

மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். 

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் 

முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி 

மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை 

முகத்தில் 

தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் 

ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் 

எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு 

தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.



என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!


சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ்

மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம்



வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி 
உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான 
மருத்துவக்குணங் களை கொண்டது.


தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற

நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற

அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத்

தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்

காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற

வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.



சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு 
வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய 
அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை 
தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.


வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய்

எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில்

புண்ஆறும்.



கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் 
பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் 
இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் 
கட்டும் மாறும்.


இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி

அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக

பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில்

இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல

மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது
J.ELANGOVAN.TRICHY