Monday 25 June 2012

<object width="420" height="315"><param name="movie" value="http://www.youtube.com/v/DLWYMRU6FAs?version=3&amp;hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/DLWYMRU6FAs?version=3&amp;hl=en_US" type="application/x-shockwave-flash" width="420" height="315" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

Friday 15 June 2012

முருங்கை சூப்

முருங்கைக்காய் - 4
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு மேஜைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
மல்லித் தூள் (தனியாதூள்) - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 2 பல்
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு




செய்முறை

1. உருளைக்கிழங்கைத் தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம் முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. குக்கரில் உருளைக்கிழங்கு, வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீருடன் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.
4. குக்கரில் ஆவி அடங்கியதும், முருங்கைக்காயின் சதைப் பகுதியை தனியே வழித்தெடுக்கவும். உருளைக்கிழங்கு, வெங்காயத்தை தனியே எடுத்து அரைக்கவும்.
5. ஏற்கனவே குக்கரில் வேகவைத்த தண்ணீரில் முருங்கைக்காய் விழுது, உருளைக்கிழங்கு வெங்காய விழுதைச் சேர்த்து கலக்கவும்.
6. மல்லித்தூள், பச்சை மிளகாய், பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
7. வெண்ணெயை உருக்கி அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
8. பின்னர், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் கலந்த வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
9. கொதித்ததும் இறக்கி வைத்து எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.


SAMAYAL: தக்காளி பச்சடி

தேவையான பொருள்கள்
தக்காளி - 5
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 3
பாசிப் பருப்பு - 100 கிராம்
சாம்பார்ப் பொடி - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
பாசிப் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை முழுசாக, நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். வெந்த பாசிப் பருப்புடன், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்ப் பொடியுடன் உப்பையும் போட்டுக் கொதிக்க விடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், மல்லித்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பருப்பு - தக்காளிப் பச்சடியை அதில் கொட்டவும்.
கொதித்துப் பக்குவமானதும் இறக்கி வைத்துப் பயன்படுத்தவும்.

தக்காளி பச்சடி


தேவையான பொருள்கள்
தக்காளி - 5
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 3
பாசிப் பருப்பு - 100 கிராம்
சாம்பார்ப் பொடி - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
பாசிப் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை முழுசாக, நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். வெந்த பாசிப் பருப்புடன், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்ப் பொடியுடன் உப்பையும் போட்டுக் கொதிக்க விடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், மல்லித்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பருப்பு - தக்காளிப் பச்சடியை அதில் கொட்டவும்.
கொதித்துப் பக்குவமானதும் இறக்கி வைத்துப் பயன்படுத்தவும்.

Wednesday 13 June 2012

வெள்ளரி சாதம் செய்யுங்கள்

      பச்சரிசி  – 1 கப்
    *வெள்ளரி துருவல் – 1 / 2 கப்
    *பச்சை மிளகாய்   -  4
    *இஞ்சி  – ஒரு துண்டு
    *எலுமிச்சம்பழச்சாறு  – 1 மேசைகரண்டி
    *மஞ்சள்தூள்  – ஒரு சிட்டிகை
    *பெருங்காயத்தூள்  – 1 / 2 தேக்கரண்டி
    *உப்பு  – தேவையான அளவு
    *கருவேப்பிலை  – சிறிதளவு
    *கடுகு  -  1 / 2 தேக்கரன்டி
    *உளுத்தம்பருப்பு  -  1 / 2 தேக்கரண்டி
    *நெய்  -  1 மேசைகரண்டி
   *அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளவும்.பச்சை மிளகாய்,        இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் நெய் ஊற்றி கடுகு,   உளுத்தம்பருப்பு *தாளித்து ,இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் ,மஞ்சள்தூள் சேர்த்து , வெள்ளரி துருவலையும், உப்பும்  சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
*இந்த கலவையுடன் சாதம், எலுமிச்சம்பழ சாறு கலந்து பரிமாறவும்.

Saturday 9 June 2012

மாங்காய் ஊறுகாய்


தேவையானவை

மாங்காய் - 2 பெரியது
உப்பு - 2 கப்
மிளகாய்த்தூள் - 1 1/2 கப்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
வெந்தயத்தூள் - 1 டீஸ்பூன் (வெந்தயத்தை எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து பொடிக்க வேண்டும்)
கடுகுத்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - சிறிது
நல்லெண்ணெய் - 2 கப்
கறிவேப்பிலை

செய்முறை
       
      மாங்காயை கழுவி உலர்த்தி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • இதில் உப்பு கலந்து மூடி வைக்கவும். (கண்ணாடி பாத்திரத்தில் வைத்தால் சீக்கிரம் கெடாது)
  • ஒவ்வொரு நாளும் கை படாமல் கலக்கி விடவும்.
  • 5 அல்லது 6 நாள் சென்ற பிறகு மிளகாய்த்தூளை ஊறிய மாங்காயுடன் கலக்கவும்.
  • கடாயில் நல்லெண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், கடுகுத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் மாங்காயும் சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.
       2 வாரங்களுக்குப் பிறகு உபயோகிக்கலாம்.
       6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்

முருங்கை ரசம்

எப்போதும் ஒரே விதமான ரசம் வைத்து சலிப்படைந்தவர்கள் முருங்கைக்காயில் ரசம் வைக்கலாம். தக்காளியுடன் ஐந்து துண்டு முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். மணமும் ருசியும் ஊரைக்கூட்டும். ரசம் வெறுப்பவர்கள் கூட ரசித்து சாப்பிடுவார்கள்.

பூண்டு ஊறுகாய்

உரித்த பூண்டு - 300 கிராம்,
மிளகாய்த்தூள் - 3/4 கப்,
உப்பு - 1/2 கப்
எலுமிச்சை ரசம் - 1 கப்
எண்ணெய் - 1 கப்
பெருங்காயம் - கொஞ்சமாக
கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை.
வறுத்து பொடிக்க:
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
தனியா - 1/2 ஸ்பூன், 





செய்முறை


வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, சீரகம்,
வெந்தயம் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் கொஞ்சம்
நர நரவென பொடித்துக்கொள்ளவும்.

பூண்டை தண்ணீர் விடாமல் குக்கரில் வைத்து ஸ்டீம் செய்து
எடுக்கவும். தண்ணீர் விடாமல் ரெண்டு விசில் விட்டால் கூட
போதும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு
சேர்த்து வெடித்ததும் பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

உடன் பூண்டு சேர்த்து நன்கு கலந்ததும், காரத்தூள், உப்பு,
பொடித்து வைத்திருக்கும் பொடி சேர்த்து உடன் அடுப்பை
அணைத்துவிடவும். நன்கு கிளறிவிட்டு எலுமிச்சை ரசத்தை
ஊற்றி கிளறவும். முதலில் மிக கெட்டியா இருக்கும். கொஞ்ச
நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்து விடும்.

சுவையான, பூண்டு ஊறுகாய் ரெடி. காற்று புகாத பாட்டிலில்
போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். 3 மாதம் வரை கெடாது.
ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை.


Sunday 3 June 2012

காளான் குருமா


காளான் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
பட்டை – 3
கிராம்பு – 3
சோம்பு – 1/2 தேக்கரண்டி
கசகசா – 1/4 தேக்கரண்டி
தேங்காய் – 1/4 மூடி
மல்லித்தூள் – 1 மேஜைக்கரண்டி
மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – 1 கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு உடனே எடுத்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும்.
தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றையும் தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெட்டிய காளானைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பிறகு தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக சிறிது நேரம் அடுப்பை மெல்லிய தீயில் எரியவிட்டு, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லி தழை சேர்க்கவும்
J.ELANGOVAN.TRICHY