Monday 28 May 2012

மாம்பழ கார குழம்பு

தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழம் - ஒன்று
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - பன்னிரண்டு
மிளகாய் தூள் - இரண்டு  டீஸ்பூன்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கால் கப்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்

எண்ணையில்லாமல் வறுத்து பொடிக்க:

வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

* வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.

* வறுத்து பொடிக்க வேண்டியத்தை பொடித்து வைத்து கொள்ளவும்.

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மாம்பழத்தை தோலுடன் பெரிது பெரிதாக நறுக்கவும்.

* புளியை இரண்டரை கப் சுடு நீரில் கரைத்து கொள்ளவும்.

* தக்காளியை நீர் விடாமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து புளி நீரில் சேர்த்து கலக்கவும்.

* எண்ணையை காயவைத்து கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.

* புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மாம்பழ துண்டுகள் சேர்த்து உப்பு சரி பார்த்து தணலை நடுத்தரமாக வைக்கவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் கக்கியதும் பொடித்த பொடி தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.

குறிப்பு:
=======

மாம்பழம் சேர்த்து செய்வதால் இனிப்பாக இருக்குமென்று நினைக்க வேண்டாம்.காரமும்,புளிப்பும் சேர்ந்து அருமையாக இருக்கும்.காண்டிப்பாக அனைவரும் செய்து பார்க்க வேண்டிய ஒரு கார குழம்பு.காரம் கூட குறைய சேர்த்து கொள்ளலாம்.

சீரக சப்பாத்தி


தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், சீரகம் – 2 டீஸ்பூன், தயிர் – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர் சேர்த்து… எலுமிச்சைச் சாறை விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். காரம் தேவைப்பட்டால் துருவிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.
J.ELANGOVAN.TRICHY