Monday 28 May 2012

மாம்பழ கார குழம்பு

தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழம் - ஒன்று
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - பன்னிரண்டு
மிளகாய் தூள் - இரண்டு  டீஸ்பூன்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கால் கப்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்

எண்ணையில்லாமல் வறுத்து பொடிக்க:

வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

* வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.

* வறுத்து பொடிக்க வேண்டியத்தை பொடித்து வைத்து கொள்ளவும்.

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மாம்பழத்தை தோலுடன் பெரிது பெரிதாக நறுக்கவும்.

* புளியை இரண்டரை கப் சுடு நீரில் கரைத்து கொள்ளவும்.

* தக்காளியை நீர் விடாமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து புளி நீரில் சேர்த்து கலக்கவும்.

* எண்ணையை காயவைத்து கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.

* புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மாம்பழ துண்டுகள் சேர்த்து உப்பு சரி பார்த்து தணலை நடுத்தரமாக வைக்கவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் கக்கியதும் பொடித்த பொடி தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.

குறிப்பு:
=======

மாம்பழம் சேர்த்து செய்வதால் இனிப்பாக இருக்குமென்று நினைக்க வேண்டாம்.காரமும்,புளிப்பும் சேர்ந்து அருமையாக இருக்கும்.காண்டிப்பாக அனைவரும் செய்து பார்க்க வேண்டிய ஒரு கார குழம்பு.காரம் கூட குறைய சேர்த்து கொள்ளலாம்.

சீரக சப்பாத்தி


தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், சீரகம் – 2 டீஸ்பூன், தயிர் – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர் சேர்த்து… எலுமிச்சைச் சாறை விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். காரம் தேவைப்பட்டால் துருவிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

Saturday 26 May 2012

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா


காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா
மசாலா அரைத்துக்கொள்ள:
வெங்காயம் - 2
பேல் பூரி - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
* வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.
* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை புளி, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.
* பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
* தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.
* பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
* இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

Thursday 24 May 2012

மரவள்ளிக் கிழங்கு வடை


தேவையான பொருள்கள்:
மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம்
மிளகாய்தூள் 1 - ஸ்பூன்
வேர்க்கடலை பவுடர் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு 
பெருங்காயப் பொடி - அரை ஸ்பூன்
எண்ணெய் - 500 கிராம்
செய்முறை:
* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.
* அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
* தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.

1.ஜவ்வரிசி வடாம்



தேவையான பொருட்கள்ஜவ்வரிசி - 1 கிலோபச்சை மிளகாய் - 10எலுமிச்சம் பழம் - 3உப்பு - தேவையான அளவு


செய்முறை :


பச்சை மிளகாயுடன் உப்பைச் சேர்த்து நைசாக அரைத்து எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வைக்கவும். ஜவ்வரிசியை அளந்து அதன் அளவைப் போல் இரண்டரை பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து ஜவ்வரிசியைப் போட்டு வேக வைத்து ஆற வைத்து மிளகாய் கலவையைக் கிளறவும். சிறிய கரண்டியால் (பிளாஸ்டிக் ஷீட் அல்லது துணியில் மாவை விட்டு சமமாகவும் வட்டமாகவும் பரப்பிக் காயவைத்து கூழ் வடாம் எடுப்பது போல் எடுத்து வைக்கவும். ஜவ்வரிசியை கொஞ்சம் கெட்டியாக கிளறி ஆறியதும் உப்பு, எலுமிச்சம்பழம், பச்சைமிளகாய் கலவையைப் போட்டுக் கலந்து தண்ணீரைக் கையில் தொட்டுக்கொண்டு ஜவ்வரிசியை கையில் எடுத்து ஷீட்டில் வட்டமாகவும் மெல்லியதாகவும் தட்டலாம். பொரிக்கும்போது முத்துப்போல் பொரியும். பக்குவம் கெட்டியாக இருக்கவேண்டும்.

Saturday 19 May 2012

மாங்காய் இனிப்பு தொக்கு


தேவையான பொருட்கள்

கிளிமூக்கு மாங்காய் - 1 பெரியது
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வெல்லம் (துருவியது) - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை

1. மாங்காயை தோல் சீவி சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.



3. பிறகு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, உடன் வெட்டி வைத்துள்ள மாங்காயைப் போட்டு கிளறி, 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

4. மாங்காய் நன்றாக வெந்ததும், துருவிய வெல்லத்தைப் போட்டு நன்றாகக் கிளறி, சுமார் ஐந்து நிமிடம் வரை சிறுதணலில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவையோடு இந்த தொக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

2. இந்த தொக்கு குழைவாக வெந்து இருந்தால் சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

3. தேங்காய் சாதம், கறிவேப்பிலை சாதம், தயிர் சாதம் போன்ற சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

4. தொக்கு செய்யும் போது, அடுப்பை சிறு தணலில் மட்டுமே வேகவிடவும்.

வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் - 2
பூண்டு - 5 பல்
வரமிளகாய் - 10
சோள மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு






செய்முறை

1. வாழைக்காய் நீள நீளத் துண்டுகளாக விரல் மொத்தத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.

3. வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3. வெந்நீரில் போட்டு எடுத்த வாழைக்காயுடன் அரைத்த மசாலா விழுது, சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

4. எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த வாழைக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

Sunday 6 May 2012

SAMAYAL SHORTCUTS: பாதாம் ஹல்வா

பாதாம்  ஹல்வா – சொலும்போதே நாவில் நீர் ஊற செய்யும் ஒரு இனிப்பு இது .
இதை பல வழிகளில் செயலாம் நாம் ஒவ்வொன்றாக பார்போம் .
தேவையானவை:
பாதாம் பருப்பு 2 கப் விழுது (250  கிராம் பருப்பை ஊறவைத்து , தோலுரித்து பாலில் அரைக்கவும் )
சக்கரை 2 கப்
பால் – 1/2 கப் பாதாமை அரைக்க
குங்குமப்பூ 10 -12 இழைகள்
நெய் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் (தேவையானால் )
செய்முறை:
பாதாம் பருப்பை 2 மணிநேரம் வெந்நீரில் ஊரவைக்கவும்
ஊரவைத்த பருப்பை ,தோலுரித்து பாலில் அரைக்கவும்
ரொம்ப பால் விட வேண்டாம், தோசைமாவை விட கெட்டியாக இருக்கணும்.
ஒரு உருளி இல் அரைத்தத்தை விட்டு, சக்கரை போட்டு  கிளற ஆரம்பிக்கணும்.
ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூவை போட்டு துளி பால் விட்டு வைக்கவும்
பிறகு கரைத்து ஹல்வாவில் கொட்டனும்.
ஹல்வா கொதிக்க ஆரம்பித்ததும் கைவிடாமல் கிளறவும்.
கொஞ்சம் திறந்து வரும் பொது, நெய் விட  ஆரம்பிக்கணும்.
கொஞ்சம் கொஜமாக விட்டு கிளறனும்.
கரைத்து வைத்துள்ள குங்கும பூவை இதில்  கொட்டவும்
நெய் முழுவதும் அந்த ஹல்வா  உறிந்து கொண்டு நன்கு பொரிந்து வரும்.
அப்ப இறக்கவும்.
ஆறினதும் அல்லது சுட சுட “பாதாம் ஹல்வா” வை  பரிமாறவும்.

சத்துமாவு கஞ்சி


இது ரொம்ப சத்தான கஞ்சி . வீட்டிலேயே தயார் செயலாம் ; கடைகளிலும் பாக்கெட் போட்டு
விற்பதைக்காட்டிலும் நாமே செய்து கொடுப்பது சிறந்தது புன்னகை இனி செய்முறை யை பார்க்கலாம் .
தேவையானவை :
வேர்கடலை 1 கப்
புழுங்கல் அரிசி 1 கப்
சம்பா கோதுமை 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
கேழ்வரகு 1 கப்
பயத்தம் பருப்பு 1 கப்
செய்முறை :
வாணலி இல் ஒவ்வொரு ஐட்டமாக போட்டு பொன் வறுவலாக வறுக்கணும்.
தனித்தனியாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
ஆறினதும் மாவு மிஷின் இல் மாவாக அறக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
தேவை படும் போது, கஞ்சி தயாரித்து தரவும்.
குழந்தை இன் விருப்பத்தை பொறுத்து பால் சர்க்கரை அல்லது மோர் + உப்பு போட்டு தரலாம் .
குறிப்பு: கஞ்சி செய்ய : குழந்தைகளானால் 1 ஸ்பூன்; பெரியவர்களானால் 2 – 3 ஸ்பூன் போட்டு கஞ்சி தயாரிக்கவும். பெரியவர்களும் குடிக்கலாம். பெரியவர்கள் மோர் விட்டு உப்பு போட்டு குடிக்கலாம் அல்லது ரசம், சாம்பார் ஊறுகாய் ஏதாவது ஒன்று சேத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும் , நல்லா பசி தாங்கும்.
உருண்டை தயாரிக்க : விரத நாட்களில் இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம்

SAMAYAL SHORTCUT: வெங்காய மசாலா

தேவையான பொருட்கள் :

1 .வெங்காயம் - 3
2 .உருளைக்கிழங்கு - 1
3 .பட்டாணி - 50 கிராம்
4 .தக்காளி - 2
5 .நல்லெண்ணெய் - தேவையான அளவு
6 .காய்ந்த மிளகாய் - 10
7 .சீரகம் - 1 ஸ்பூன்
8 .கொத்தமல்லி - 1 ஸ்பூன்
9 .கடுகு - சிறிதளவு
10 .உப்பு - தேவையான அளவு
11 .மஞ்சள்த்தூள் - 1 ஸ்பூன்

செய்முறை :

சிறிதளவு வெங்காயம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றை
மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். அதன் பிறகு பட்டாணியையும், உருளைகிழங்கையும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு அரைத்த மசாலாவை போட்டு வாசனை வரும் வரை வதக்கி விட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு இவை இரண்டையும் போட வேண்டும். பின்பு உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளியவும், இறக்கவும்.சுவையான வெங்காய மசாலா டிஷ் ரெடி.
J.ELANGOVAN.TRICHY