Saturday 26 July 2014

வீட்டில் கொசு தொல்லையா.? கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..!


வீட்டில் கொசு தொல்லையா.? கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..!

வீட்டில் கொசு தொல்லையா.? கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..!
-----------------------------------------------------------------------------------
கொசுபர்த்தி தேவையில்லை, ஹிட் தேவையில்லை, காயில்கள் தேவையில்லை. தீங்கு விளைவிக்கும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..!
உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி..!
ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்கப்பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்...!

Wednesday 23 July 2014

அறுசுவைகளும் அதன் ஆற்றல்களும்

                       அறுசுவைகளும் அதன் ஆற்றல்களும் 



Monday 21 July 2014

கருப்பட்டி பணியாரம்:

கருப்பட்டி பணியாரம்:

தேவையானப் பொருள்கள்:
இட்லி மாவு_ஒரு கிண்ணம்
கருப்பட்டி என்கிற பனைவெல்லம்_1/2 கிண்ணம்
ரவை_ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1 (விருப்பமானால்)
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
செய்முறை:
இட்லி மாவில் உப்பு குறைவாக இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும்.
வெல்லத்தைத் தூளாக்கி ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் கருக வாய்ப்புண்டு.
தண்ணீர் கொதித்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வெல்ல நீரை ஆற வைக்கவும்.
வெறும் வாணலியில் ரவையை சூடு வர வறுத்து ஆறியதும் மாவில் கொட்டிக் கலந்து வைக்கவும்.
மேலும் வெல்ல நீர்,ஏலக்காய்,தேங்காய்ப்பூ எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.
ஒரு 1/2 மணி நேரம் கழித்து (மாவில் உள்ள ரவை ஊறிய பிறகு) குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
சட்டி சூடாகியதும் ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு குழியின் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றி,மூடி வேக வைக்கவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் மேல் பாகம் தீய்ந்தும் உள்ளே வேகாமலும் இருக்கும்.
ஓரளவு வெந்திருக்கும் என நமக்கே தெரியும்.(எவ்வளவு இட்லி & தோசை சுட்டிருப்போம்!)அப்போது மூடியைத் திறந்து ஒரு ஷார்ப்பான அதே சமயம் தட்டையான ஒரு ஸ்பூனால் பணியாரத்தின் ஓரங்களை பெயர்த்து, திருப்பிப் போட்டு இந்த முறை சீக்கிரமே எடுத்துவிடவும்.
இப்போது சுவையான,இனிப்பான‌ பணியாரம் தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.அப்படியேதான் சாப்பிட வேண்டும்.
Photo: கருப்பட்டி பணியாரம்:

தேவையானப் பொருள்கள்:

இட்லி மாவு_ஒரு கிண்ணம்
கருப்பட்டி என்கிற பனைவெல்லம்_1/2 கிண்ணம்
ரவை_ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1 (விருப்பமானால்)
தேங்காய்ப்பூ_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)

செய்முறை:

இட்லி மாவில் உப்பு குறைவாக இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும்.

வெல்லத்தைத் தூளாக்கி ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் கருக வாய்ப்புண்டு.

தண்ணீர் கொதித்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி வெல்ல நீரை ஆற வைக்கவும்.

வெறும் வாணலியில் ரவையை சூடு வர வறுத்து ஆறியதும் மாவில் கொட்டிக் கலந்து வைக்கவும்.

மேலும் வெல்ல நீர்,ஏலக்காய்,தேங்காய்ப்பூ எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.

ஒரு 1/2 மணி நேரம் கழித்து (மாவில் உள்ள ரவை ஊறிய பிறகு) குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.

சட்டி சூடாகியதும் ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு குழியின் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றி,மூடி வேக வைக்கவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் மேல் பாகம் தீய்ந்தும் உள்ளே வேகாமலும் இருக்கும்.

ஓரளவு வெந்திருக்கும் என நமக்கே தெரியும்.(எவ்வளவு இட்லி & தோசை சுட்டிருப்போம்!)அப்போது மூடியைத் திறந்து ஒரு ஷார்ப்பான அதே சமயம் தட்டையான ஒரு ஸ்பூனால் பணியாரத்தின் ஓரங்களை பெயர்த்து, திருப்பிப் போட்டு இந்த முறை சீக்கிரமே எடுத்துவிடவும்.

இப்போது சுவையான,இனிப்பான‌ பணியாரம் தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.அப்படியேதான் சாப்பிட வேண்டும்.

Thursday 3 July 2014

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய்....


நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய்....
சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுகசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து.
ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது.
அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை.
கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும்.
மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.
மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது. முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.
இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

Tuesday 1 July 2014

இந்த கண்ணொலியை தயவுசெய்து பார்க்கவும்


J.ELANGOVAN.TRICHY