Sunday 30 September 2012

பெண்களின் தலைமுடி செழித்து வளர முருங்கை இலை உண்ணுங்கள்


சிலருக்கு தலைமுடி வளராமல் சிறியதாகவே இருக்கும். சிலருக்கு நன்கு வளர்ந்த பின்னர் சிறிது சிறிதாக உதிர ஆரம்பித்து விடும்.
இன்னும் சிலருக்கு தலை முடி பாதியிலேயே உடைந்து வறட்ச்சியைக் கொடுக்கின்றது. இதனால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தலைமுடி வளருவதற்காக பல்வேறு எண்ணெய், தைலம் போன்றவற்றை பாவிப்பார்கள்.
ஆகவே, இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு, தலைமுடி நன்கு வளர தினமும் முருங்கை இலையை சூப் செய்து உண்டு வருதல் சிறந்தது.
இதனால், தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து 3 மாதங்கள் உண்ணவேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கான பலன் கிட்டும்.
அதாவது, முருங்கை இலை 2 கப், வெண்ணெய் 1 தேக்கரண்டி, கோர்ன் ஃப்ளோர் 1 தேக்கரண்டி, உப்புத்தூள், மிளகுத்தூள் சிறிதளவு.
முதலில் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த முருங்கை இலையை 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி வரும்வரையில் வேகவேண்டும்.
பின்னர் அதனை வடிகட்டி தேவையானால் வெண்ணெய் சேர்த்து சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம். வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும் பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.
இவ்வாறு முருங்கைக் கீரை சாற்றை தினமும் குடித்து வர உங்கள் தலைமுடி 2 வாரங்களில் அடர்த்தியாக வளரும்.

No comments:

J.ELANGOVAN.TRICHY