Thursday 19 April 2012

உருளைக்கிழங்கு குருமா


  • உருளைக்கிழங்கு குருமா


  • உருளைக்கிழங்கு - 3
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • பூண்டு - 5 பல்
  • தக்காளி - ஒன்று
  • மஞ்சள்தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு
  • அரைக்க :
  • தேங்காய் - ஒரு கப்
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • கசகசா - கால் தேக்கரண்டி
  • பச்சைமிளகாய் - 6
  • சின்னவெங்காயம் - 6
  • பூண்டு - 6 பல்
  • மல்லிதழை - கொஞ்சம்
  • மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி - சிறு துண்டு
  • தாளிக்க :
  • பட்டை - 3 துண்டு
  • கிராம்பு - 3
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • எண்ணெய் - தேவைக்கு

  •  செய்முறை 

  • பூண்டு, வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை சிறு துண்டாகவும், உருளையை தோல் சீவி சிறு துண்டாகவும் நறுக்கி வைக்கவும். வாணலியில் அரைக்க கொடுத்த பொருட்களை சேர்த்து 5 நிமிடம் வதக்கி அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கின உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும் வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள்தூள், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும். மல்லித்தழை தூவி பரிமாற குருமா ரெடி. இந்த குருமா தக்காளிசாதம், சப்பாத்தி, பூரிக்கு பொருத்தமாக இருக்கும்.

No comments:

J.ELANGOVAN.TRICHY