Saturday 28 April 2012

சூடாக புலவ் -VEGETABLE PULAO

தேவையானவை

அரிசி 2 1/2 டம்ளர்
உருளைக்கிழங்கு 2 மீடியம் சைஸ்
காரட் 1
பீன்ஸ் 10-15
குடைமிளகாய்  1/4
புதுசான பச்சைப் பட்டாணி, உரித்தது, 2 கைப்பிடி
சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) 8-10
பூண்டு உரித்தது 15-20
இஞ்சி 1” துண்டு
தக்காளி 3 மீடியம் சைஸ்
பச்சை மிளகாய் 7-8
கிராம்பு 4
ஏலக்காய் 2
ஜீரகம் 1/2 டீஸ்பூன்
பட்டை 1 சிறிய துண்டு
மிளகாய்ப் பொடி 1/2 டீஸ்பூன்
எண்ணெய் / நெய்  8 டேபிள்ஸ்பூன்
உப்பு 3 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 8 டம்ளர் (ஒரு பங்கு அரிசிக்கு 3 பங்கு தண்ணீர்)

செய்முறை

கிராம்பு, ஏலக்காய், பட்டை இவைகளை பொடித்துக் கொள்ளவும்.
அரிசியை 30 நிமிஷம் ஊறவைத்து, களைந்து கொள்ளவும்
காய்கறிகளை சதுரங்களாக நறுக்கவும்
கொதிக்கும் நீரில் தக்காளியை 2 நிமிஷம் போட்டு, பின்னர் தோலுரித்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோலுரித்து, நன்கு அலம்பி, பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.

குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்/நெய் விட்டு, சூடானதும், பொடித்த கிராம்பு முதலானவைகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்.
அடுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் விழுது; 4 நிமிஷம்
next, பூண்டு இஞ்சி விழுது; 3 நிமிஷம்
அடுத்து, தக்காளி விழுது; 6 நிமிஷம்
மிளகாய்ப் பொடி, உப்பு சேர்க்கவும்; 2 நிமிஷம்

நறுக்கிய காய்கறிகளை போட்டு, மிச்சமுள்ள நெய்/எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் ஊற்றி, வதக்கவும் - 8 நிமிஷம்
களைந்த அரிசியை போட்டு, 3 நிமிஷம் வதக்கவும். காய்கறிகளும், அரிசியும் நன்கு ஒன்றுசேர வேண்டும்.
8 டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, சமைக்கவும்.
4 விஸில் வந்தபிறகு அடுப்பை அணைக்கவும்.

வெங்காயம்+தக்காளி RAITHA-வுடன், சூடாக புலவ் சாப்பிடவும்

No comments:

J.ELANGOVAN.TRICHY